இன்று சுவிட்சர்லாந்து முழுவதும் பெண்களின் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, இந்த நாளில் இலட்சக்கணக்கான பெண்கள் சம உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
“ஒரு அடி பின்வாங்க வேண்டாம் – அதிக சமத்துவத்திற்காக ஒன்றாக!” என்ற குறிக்கோளுடனும், ஐந்து முக்கிய கோரிக்கைகளுடனும், சூரிச் உட்பட 25 க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இந்த ஆண்டு போராட்டம் ஐந்து பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.
ஊதிய பாகுபாட்டை நீக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.
சம வாய்ப்புகளை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு கட்டாய கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் தேவை என்றும், குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், 4,500 பிராங்குகளின் பொதுவான குறைந்தபட்ச ஊதியத்திற்கும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
குழந்தை பராமரிப்பை விரிவுபடுத்த வேண்டும்.அனைவருக்கும் இலவச, உயர்தர பகல்நேர பராமரிப்பு சேவையை கிடைக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கையாகும்.
மூலம்- 20min