சூரிச்சின் ஹின்வில்லில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:10 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
வெட்சிகான் நோக்கி ஷ்வீபெல்ஸ்ட்ராஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு புல் விளிம்பைக் கடந்து ஒரு வேலியில் மோதினார்.
இந்த விபத்தில் 61 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான நிலையில் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று இரவு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
மூலம்- 20min.