23.9 C
New York
Thursday, August 27, 2026

லூசெர்ன் ஏரியில் மூழ்கிய விமானத்தைத் தேடும் நீர்மூழ்கி.

லூசெர்ன் ஏரியில் நேற்று மூழ்கிய விமானத்தைத் தேடும் பணி இன்றும்  தொடர்கிறது.

இந்தப் பணியில், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு ஒரு தனியார் நீர்மூழ்கிக் கப்பலும் உதவி வருகிறது.

எனினும் விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று லூசெர்ன் காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடம் லூசெர்ன் ஏரியின் பல்வேறு கிளைகள் சந்திக்கும் இடமான க்ரூஸ்ட்ரிச்டரில் அமைந்துள்ளது.

இது லூசெர்ன் நகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

விமானம் தரையிறங்கியதாக நம்பப்படும் இடத்தில், லூசெர்ன் ஏரி 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்டது.

விமானம் திசை மாறிச் சென்றதா என்ற சந்தேகமும் உள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles