-0.7 C
New York
Sunday, December 28, 2025

படிக்கட்டுகளில் இறந்து கிடந்த நபர்.

துர்காவ் மாகாணத்தின் முன்ச்விலெனில் படிக்கட்டு அடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் இறந்து கிடந்தார்.

இரவு 10 மணியளவில், ஷ்மிட்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள ஒரு கட்டடத்தின் வெளிப்புற படிக்கட்டுக்கு அருகில் ஒருவரின் சடலம் கிடப்பதாக ஒரு வழிப்போக்கர் கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் அளித்ததாக துர்காவ் பொலிஸ் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

விரைவான மருத்துவ உதவி இருந்தபோதிலும், 70 வயதான சுவிஸ் நபர் சிறிது நேரத்திற்குப் பிறகு இறந்தார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, இறந்தவரின் சடலம் சென் காலனில் உள்ள தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles