21.2 C
New York
Thursday, August 13, 2026

அடுக்குமாடி குடியிருப்பில் சடலம்- வன்முறைக் குற்றம் நிகழ்ந்ததாக சந்தேகம்.

டெரெண்டிங்கனில் உள்ள பிரதான வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றுக்காலை இறந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சோலோதர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு ஏராளமான அவசர மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.

ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, ஒரு வன்முறை குற்றம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் மற்றும் சோலோதர்ன் கன்டோனின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உடனடியாக மரணத்திற்கான காரணம், சூழ்நிலைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles