கடந்த ஆண்டு சூரிச் கன்டோனல் பொலிசார், சுங்க அதிகாரிகளுடன் இணைந்து, சூரிச் விமான நிலையத்தில் பல தொன் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனுடன் தொடர்புடைய 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை கன்டோனல் பொலிசாரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
3.8 தொன் கஞ்சா, 200 கிலோகிராம் காட், 47 கிலோகிராம் கோகோயின், 26 கிலோகிராம் ஹெரோயின், 162 கிலோகிராம் ஹாஷிஷ், 30 கிலோகிராம் கெட்டமைன் மற்றும் 12 கிலோகிராம்களுக்கு மேல் தாவர அடிப்படையிலான ஹாலுசினோஜென் அயாஹுவாஸ்கா ஆகியனவே கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
2024 இல் 750 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் அதைவிட கணிசமானளவு அதிகம் கஞ்சா கடந்த ஆண்டுடு கைப்பற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோகோயின் அளவு குறைந்தது (2024 இல் இது 117 கிலோகிராம் ).
மொத்தம் 37 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சூரிச் விமான நிலையத்தை போக்குவரத்து விமான நிலையமாகப் பயன்படுத்தினர்.
மேலும் 57 பேர் விமான நிலையம் வழியாக சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் 94 சந்தேகத்திற்குரிய கடத்தல்காரர்களை கைது செய்தனர். அவர்கள் 28 நாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள் மற்றும் 68 ஆண்களாவர். கைது செய்யப்பட்ட மிகப் பழமையான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு 80 வயதாகும்.
மூலம்- swissinfo

