உக்ரைனில் நடந்த போர் பற்றிய சதித்திட்டக் கதைகள் மற்றும் தவறான கூற்றுக்களை ஊக்குவித்ததற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட முன்னாள் சுவிஸ் கேணல் Jacques Baud என்பவருக்கு பிரஸ்ஸல்ஸ் மனிதாபிமான விலக்கு அளித்துள்ளது. இதனை Jacques Baud உறுதிப்படுத்தியுள்ளார்.
“இந்த மனிதாபிமான விலக்குடன், அத்தியாவசியத் தேவைகளுக்காக எனது வங்கிக் கணக்கை அணுக எனக்கு உரிமை உண்டு” என்று முன்னாள் சுவிஸ் உளவுத்துறை அதிகாரி Jacques Baud கூறினார்.
இந்த கோரிக்கையை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர், சனிக்கிழமை பெல்ஜியம் நிதி அமைச்சகத்தின் முடிவு குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக பெர்ன் என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று தனக்குத் தெரியாது என்று Jacques Baudமேலும் கூறினார்.
டிசம்பர் 15 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்னாள் சுவிஸ் கேணல் தடை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பிரஸ்ஸல்ஸில் இருக்கும் Jacques Baud நேட்டோவில் சேருவதற்காக கீவ் ரஷ்யாவின் படையெடுப்பைத் தூண்டியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மூலம்- swissinfo

