வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெற்ற அமைதி சபையின் தொடக்கக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டுள்ளது.
காசாவில் மறுசீரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் சுவிஸ் ஆர்வமாக உள்ளது எனினும், அமைதிச்சபையின் உறுப்பினர் பதவி குறிதது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
வெளியுறவு அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிரிவின் தலைவர் மோனிகா ஷ்முட்ஸ் கிர்கோஸ் மற்றும் வொஷிங்டனுக்கான சுவிஸ் தூதுர் ரால்ஃப் ஹெக்னர் ஆகியோர் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு நேற்று அறிவித்தது.
சுவிட்சர்லாந்து முறையாக அமைதி சபையில் சேர வேண்டுமா என்பது குறித்த கேள்வியை பெடரல் கவுன்சில் [சுவிட்சர்லாந்தின் நிர்வாகி] பின்னர் பரிசீலிக்கும்” என்று ம் தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo

