8.8 C
New York
Sunday, April 5, 2026

உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாணவன்.

நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்துடன், இதேபாடசாலையைச் சேர்ந்த ஆனந்த் கிருசோந் கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் முதலிடம் கமலநாதன் மதுமினி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த மாணவர்களை வட மாகாண ஆளுநர், தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles