ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளது.
ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வழியில் சுவிட்சர்லாந்தின் வான்பரப்பில் விமானங்களை இயக்குவதற்காக மற்ற நாடுகளிடமிருந்து வந்த 12 கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுமே கூட்டாட்சி சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் (FOCA) ஒப்புதல் அளித்துள்ளது.
மார்ச் 5 முதல் 23 வரை அமெரிக்காவிடமிருந்து பதினொரு விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக FOCA, தெரிவித்துள்ளது. இவற்றில் நான்கிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன, அதே நேரத்தில் ஒரு கோரிக்கை அமெரிக்காவால் திரும்பப் பெறப்பட்டது.
மார்ச் 13 அன்று அதிகபட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டன; அவை அனைத்தும் மார்ச் 15 ஆம் திகதிக்கான விமானப் பயணங்கள் தொடர்பானவை. ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது, அதுவும் நிராகரிக்கப்பட்டது.
FOCA-வின் கூற்றுப்படி, சுவிஸ் வான்வெளி வழியாகச் செல்வதற்கான கோரிக்கைகள் “மோதலுடன் தெளிவாகத் தொடர்பில்லாதவை” எனில் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும்.
ஆனால், அவை காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வது உட்பட மனிதாபிமான மற்றும் மருத்துவ நோக்கங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயுத மோதல்கள் தொடர்பாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டால், நடுநிலைமைச் சட்டத்தின் கீழ் அவை நிராகரிக்கப்படும்.
மூலம்- swissinfo

