லௌட்டர்ப்ரூனென் நகராட்சியில் உள்ள ஐசென்ஃப்ளூவில் இருக்கும் ஷ்வார்ஸ்பிர்க் மலையில் வெள்ளிக்கிழமை காலை, பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் பனியில் புதைந்தார். விரைவான மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டார்.
பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயதான சுவிஸ் நாட்டவர், காலை சுமார் 10:20 மணியளவில் மற்றொருவருடன் “உஃபென் ஹுபெல்ன்” பகுதியில் ஒரு மாற்று சரிவில் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டதாக பெர்ன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
அருகில் இருந்தவர்கள், மீட்பு நுட்பத்தைப் பயன்படுத்தி பனியில் புதைந்திருந்த நபரைக் கண்டுபிடித்து மீட்டனர். சுவிஸ் ஆல்பைன் மீட்புக் குழு மற்றும் ஏர்-கிளேசியர்ஸ் ஹெலிகாப்டர் குழுவினர் உடனடியாக முதலுதவி அளிக்க முயன்றபோதிலும், அவர் தனது காயங்களால் உயிரிழந்தார்.
மூலம்- bluewin

