அல்லமான் SBB ரயில் நிலையத்தில் ரயில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை இரவு சுமார் 7:50 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்த இளைஞர் குழுவில் ஒரு பகுதியாக இருந்த 15 வயது சிறுவன், தண்டவாளத்தைக் கடந்தபோது, லோசான் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியது.
அவசரகால சேவைகள் விரைந்து செயல்பட்டபோதிலும், விபத்து நடந்த இடத்திலேயே அந்தச் சிறுவன் உயிரிழந்தார்.
மூலம்- bluewin

