சனிக்கிழமை, பெர்னில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஈரானிய மற்றும் அமெரிக்கக் கொடிகளுடன் பேரணி ஒன்று இடம்பெற்றது.
முடியாட்சி ஆதரவாளர்கள் மற்றும் பாரசீகத்தின் முன்னாள் ஷாவின் மகனான ரெசா பஹ்லவியின் ஆதரவாளர்களே இந்தப் பேரணியை நடத்தியிருந்தனர்.
ஒரு சுவரொட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றொன்று பஹ்லவியை “அமைதியின் சிற்பி” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பேரணி பெர்னில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் கவனத்தையும் ஈர்த்தது. கலிஸ்டா கிங்ரிச் (60) அதன் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (79), தனது தூதுவரின் புகைப்படத்தைத் தனது ‘ட்ரூத்சோஷியல்’ சமூக ஊடக இணையதளத்தில் மீண்டும் பதிவிட்டார்.
“பெர்னில் ட்ரம்ப் மற்றும் அமெரிக்கா ஆதரவுப் பேரணி, ஈரானியர்களின் பெரும் பங்கேற்புடனும் ட்ரம்ப் ஆதரவுப் பதாகைகளுடனும் நடைபெற்றது,” என்று டிரம்ப் எழுதினார். “ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிப்பவர்கள், பல ஈரானியர்கள் உட்பட, இன்று பெர்னில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்திற்காகக் கூடினர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்ன் மாகாண காவல்துறை, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. “காவல்துறையினர் அங்கு இருந்தனர், மேலும் காவல்துறையின் பார்வையில், அனைத்தும் அமைதியாகவே நடைபெற்றன,” என ஊடக அலுவலகம் தெரிவித்தது. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர் அடையாளம் காணப்படவில்லை.
மூலம்- 20min

