பாசலில் உள்ள லாங்கே எர்லன் விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிச் சென்ற இரண்டு மயில்கள், பல நாட்கள் அருகிலுள்ள சுற்றுப்புறங்களில் சுற்றித் திரிந்த பின்னர், மிருகக்காட்சிசாலைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த சில நாட்களாக, நகரின் மையத்தில் இரண்டு மயில்களைக் கண்டு ஆச்சரியமடைந்த, வழிப்போக்கர்கள் மாகாண காவல்துறைக்கு அறிவித்தனர். மயில்கள் நலமாக இருப்பதாகவும், இது ஒரு அவசரநிலை அல்ல என்றும் காவல்துறை தங்களது வாட்ஸ்அப் சேனலில் மக்களுக்கு உறுதியளித்தது.
இந்த நிலையில் இன்று மயில்கள் பிடிக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக எர்லன் அசோசியேஷன் பாசல் உறுதிப்படுத்தியது.
நீண்டகால பறவைக் காய்ச்சல் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, ஏப்ரல் மாத தொடக்கத்தில் அந்த இரண்டு மயில்களும் வளாகத்தை விட்டு வெளியேறியதாக லாங்கே எர்லன் மிருகக்காட்சிசாலையின் மேலாளர், தெரிவித்தார்.
அந்த இரண்டு பறவைகளும் மிருகக்காட்சிசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக நடமாடலாம். இந்த முறை விலங்குகள் நீண்ட காலமாக மிருகக்காட்சிசாலையை விட்டு வெளியே இருந்தது அசாதாரணமானது என்று மிருகக்காட்சிசாலை மேலாளர் கூறினார்.
மூலம்- swissinfo

