அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை இயேசுவாகச் சித்தரித்து வெளியிட்ட படத்தை நீக்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாப்பரசரை “பலவீனமானவர்” மற்றும் “மோசமானவர்” என்று பகிரங்கமாகத் தாக்கியதைத் தொடர்ந்து, அவருக்கும் போப் லியோ XIV-க்கும் இடையிலான மோதல் வெளிப்படையாகத் தீவிரமடைந்தது.
லியோ XIV, டிரம்பின் போர் முழக்கத்தை “உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறி, அச்சுறுத்தலுக்குப் பணிய மறுத்து, வழக்கத்திற்கு மாறான தெளிவுடன் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தன்னை அமெரிக்க இயேசுவாகச் சித்தரித்து, போப் லியோ XIV-க்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதற்காக செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தைப் பயன்படுத்தினார்.
“ட்ரூத் சோஷியல்” தளத்தின் அந்தப் பதிவு பின்னர் அகற்றப்பட்டுவிட்டது.
அமெரிக்க ஜனாதிபதி இயேசுவாகத் தன்னைக் காட்டிய உருவப்படத்திற்கு எழுந்த பெரும் விமர்சனங்களை அடுத்தே அவர் அதனை அகற்றியுள்ளார்.
“நான் அதை வெளியிட்டபோது, அது என்னை ஒரு மருத்துவராகக் காட்டுகிறது என்று நினைத்தேன்,” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மூலம்- bluewin

