28.5 C
New York
Tuesday, April 14, 2026

டுபாய்க்கான விமான சேவைகளை ஜூலை 11 வரை இடைநிறுத்தியது சுவிஸ் ஏர்லைன்ஸ்.

மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக, சுவிஸ் ஏர் லைன்ஸ் நிறுவனம், டுபாய்க்கான மற்றும் அங்கிருந்து வரும் தனது விமான சேவைகளை ஜூலை 11 வரை தொடர்ந்து நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மே மாத இறுதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

லுஃப்தான்சா குழுமம் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் உள்ளூரில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்த நிலைமை உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பயணிகள் பிற்கால பயணத் திகதிக்கு மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது பயணச்சீட்டு விலையை முழுமையாகத் திரும்பப் பெறலாம் என்று சுவிஸ் நிறுவனம் மேலும் கூறியது.

மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், சுவிஸ் மற்றும் பிற லுஃப்தான்சா குழும விமான நிறுவனங்களும், டெல் அவிவிற்கான விமான சேவைகள் மே மாத இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்தன.

அபுதாபி, அம்மான், பெய்ரூட், ரியாத், எர்பில், தம்மாம், மஸ்கட் மற்றும் தெஹ்ரான் ஆகிய இடங்களுக்கான விமான சேவைகள் ஓக்டோபர் 24 வரை இடைநிறுத்தப்படும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles