சார்னென் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 வயது கைதி ஒருவர் படுகாயமடைந்தார்.
ஓப்வால்டன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சார்னெனில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள சிறையில், திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சற்று முன்னதாகத் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபோரிபாச் காவல் நிலையம் மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு மையம் என்பன வெளியேற்றப்பட்டன. தீயணைப்புப் படையினர் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த 47 வயது கைதி ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக மாகாணத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சேதம் சிறைக்குள் மட்டுமே ஏற்பட்டது. சேதத்தின் சரியான அளவை இன்னும் கண்டறிய முடியவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மூலம்- 20min

