23.1 C
New York
Friday, June 26, 2026

நீரோடையில் இறங்கிய கார் பாலத்தில் மோதியது- 4 பேர் காயம்.

பெர்ன் மாகாணத்தின் ஷாட்டன்ஹால்ப் பகுதியில் உள்ள கிரிம்செல்ஸ்ட்ராஸ் தெருவில் சனிக்கிழமை மதியம் ஒரு விபத்து ஏற்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையின்படி, ஆரேஷ்லூக்ட் ஓஸ்ட் வாகன நிறுத்துமிடத்திலிருந்து மெய்ரிங்கன் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது, ​​அதன் ஓட்டுநர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றார்.

அந்தக் கார், வீதிக்கு இணையாக ஓடிக்கொண்டிருந்த ஓடைப் படுகைக்குள் விலகிச் சென்றது. அங்கே, அது ஒரு பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த மோதலின் தாக்கத்தால் காரின் கூரை கிழிந்ததில், ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். உடன் பயணித்த மூன்று பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பினர்.

அருகில் இருந்தவர்கள், வாகனத்தில் இருந்த நான்கு பேரையும் வெளியே இழுத்து, அவசர மருத்துவ சேவைகள் வரும் வரை முதலுதவி அளித்தனர்.

படுகாயம் அடைந்த ஓட்டுநர், ரெகா ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே சமயம், லேசான காயமடைந்த மற்ற மூன்று பேரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles