கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாகாணத்தின் கிரான்ட் கவுன்சில், அதன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கும் மாகாண காவல்துறைக்கும் 1.255 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கீடு செய்யவுள்ளது.
அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு 2.5 முழுநேரப் பதிவாளர்கள், 1.3 நிர்வாகச் செயலாளர்கள் மற்றும் 0.5 இதரப் பணியாளர்களுக்காக மொத்தம் 670,000 சுவிஸ் பிராங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் நிர்வாகத்திற்காக கூடுதலாக 150,000 சுவிஸ் பிராங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், நிபுணர் மதிப்பீடுகளுக்காக 20,000 சுவிஸ் பிராங்குகளும் , விசாரணைகளுக்கான இடங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கான செலவும் அடங்கும்.
அதிகாரிகளால் ஏற்படும் பல்வேறு படிகள் மற்றும் செலவினங்களுக்காக சுமார் 10,000 சுவிஸ் பிராங்குகளும் , தளபாடங்கள் மற்றும் உபகரணங்களுக்காக 20,000 சுவிஸ் பிராங்குகளும் , ஆணைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் நிபுணர்களைப் பணியமர்த்துவதற்காக 100,000 சுவிஸ் பிராங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாகாண காவல்துறைக்கு 585,000 சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும். இந்தத் தொகையானது பாதுகாப்புச் செலவுகள் (CHF500,000), உணவு, தங்குமிடம் மற்றும் பயணச் செலவுகள் (CHF40,000) மற்றும் உபகரணங்கள் (CHF45,000) ஆகியவற்றை உள்ளடக்கும்.
மூலம்- swissinfo

