11.9 C
New York
Sunday, March 29, 2026

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில், வெப்பநிலை அதிகரிப்பால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்- புன்னாலைக்கட்டுவன் பகுதியில், வெப்பநிலை அதிகரிப்பால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் கீழே மயங்கி விழுந்திருப்பதை அவதானித்த அயலவர்கள் அவரது அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில்  அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கும் மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக  உடற்கூற்று  பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles