20.6 C
New York
Wednesday, June 17, 2026

சுவிஸ் மலை வாசஸ்தலத்தில் கையெழுத்திடப்படவுள்ள வரலாற்று ஒப்பந்தம்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-ல் உக்ரைன் அமைதி உச்சிமாநாடு இடம்பெற்ற, மத்திய சுவிட்சர்லாந்தின் மலைவாசஸ்தலமான பர்கன்ஸ்டாக்கில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட உள்ளது.

சுவிஸ் வெளியுறவு அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து விவாதிப்பதற்கான ஒரு சந்திப்பை எளிதாக்குவதற்கும், சுவிட்சர்லாந்திற்கு தூதுக்குழுக்கள் வருவதை எளிதாக்குவதற்கும், பல நாட்களாக அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமைச்சு கூறியது.

இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை பர்கன்ஸ்டாக்கில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

“இந்த இடத்தை பாகிஸ்தான் மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களும், அமெரிக்கா மற்றும் ஈரானும் முன்மொழிந்தனர்,” என்று அமைச்சு கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு, இந்த சந்திப்பு அதன் மண்ணில் நடைபெறுவதற்குத் தேவையான நடைமுறை மற்றும் இராஜதந்திர நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles