சுவிஸ் மீட்புக் குழுவைச் சேர்ந்த 80 நிபுணர்கள் நேற்று வெனிசுலா தலைநகரான கராகஸில் தரையிறங்கியுள்ளனர்.
இந்தக் குழு 18 தொன் அவசரகாலப் பொருட்களுடன் வந்தடைந்தது.
வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள ஒரு அறிக்கையின்படி, அவசரகாலக் குழுக்கள் வந்தடைந்த உடனேயே, வெனிசுலா அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி, ஆயத்தப் பணிகளைத் தொடங்கின.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை இடிபாடுகளில் தேடி, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வருவதே இந்தக் குழுவின் பணியாகும்.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க, சுவிஸ் அரசாங்கம் தனது அவசரகால உதவி நிதியிலிருந்து 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கியுள்ளது.
மேலும் உதவிகள் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சுவிஸ் நாட்டவர் எவரும் இருப்பதாகத் தகவல் இல்லை என்றும் அது கூறியது.
மூலம்- swissinfo


