தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெர்மாட் அருகே உள்ள மேட்டர்ஹோர்ன் மலையில் இரண்டு மலையேறுபவர்கள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஹோர்ன்லிகிராட் வழியாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, அறியப்படாத காரணங்களால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து காலை சுமார் 11 மணியளவில், ஏறத்தாழ 4,030 மீட்டர் உயரத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், அந்த இரண்டு மலையேறுபவர்களும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.
மூன்றாவது நபர் ஒருவர் அவசர சேவைகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஏர் ஜெர்மாட் ஹெலிகொப்டர் ஒன்று விபத்து நடந்த இடத்திற்குப் பறந்து சென்றது, ஆனால் அங்கு சென்றடைந்த அவசர சேவைகளால், உயிரிழந்த இருவரின் மரணத்தை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்தது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- swissinfo


