ஜெர்மனியின், பெர்லின் பிரைட் நிகழ்வில் காரினால் மோதி ஒருவரைக் கொன்று, 29 பேரை காயப்படுத்திய தாக்குதலை நடத்திய சந்தேக நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்று ஜெர்மனி அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் என்ற 21 வயது நபர், கத்தியுடன் அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin


