தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதால், சுவிஸ் ஆயுதப் படைகள் கோர்சிகாவில் தங்களது பணியை மேலும் நான்கு நாட்களுக்கு நீடித்துள்ளன.
அங்கு காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரெஞ்சு அவசரகால சேவைகளுக்கு மூன்று சூப்பர் பூமா ஹெலிகொப்டர்கள் உதவி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை லொகார்னோ இராணுவ விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த மூன்று ஹெலிகொப்டர்களும், புதன்கிழமை முதல் எளிதில் சென்றடைய முடியாத தீப் பகுதிகளைக் கையாளும் பணியில் உள்ளூர் அவசரகால சேவைகளுக்கு உதவி வருவதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.
இந்த அவசரகால குழுவினர் வியாழக்கிழமை வரை தரைவழி தீயணைப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள். வெள்ளிக்கிழமை நாடுதிரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகொப்டர்கள் தீயணைப்புப் பணிகளுக்காக சுமார் 157 தொன் தண்ணீரை கொண்டு சென்றுள்ளன.
மூன்று சூப்பர் பூமா ஹெலிகொப்டர்களில் தீயணைப்பு நிபுணர்கள், மெக்கானிக்குகள் மற்றும் சுவிஸ் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு முகமையின் (SDC) மனிதாபிமான உதவிக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 22 பேர் உள்ளனர்.
இந்த நடவடிக்கை, வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள SDC-யின் ஒரு அங்கமான கூட்டாட்சி மனிதாபிமான உதவித் திட்டத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பின் கீழ் வருகிறது.
இந்த நடவடிக்கை தொடர்பான செலவுகள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய ஒதுக்கீடுகளிலிருந்து ஈடுசெய்யப்படுகின்றன.
மூலம்- swissinfo


