லெஜியோனெல்லா நோய்த் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மனிதக் கொலை சந்தேகத்தின் பேரில் பாசல் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சுவிஸ் நகரின் அரசு வழக்கறிஞர் அலுவலகம், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாமாகவே முன்வந்து இந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக புதன்கிழமை மாலை தெரிவித்தது.
குற்றவி புலனாய்வுத் துறை இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அந்த அலுவலகம் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
கடந்த இரண்டு வாரங்களில், பாசலில் மொத்தம் 28 பேருக்கு லெஜியோனெல்லா நோய் தொற்றியுள்ளது. நகரின் சுகாதாரத் துறையின்படி, ஆறு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
க்ளீன்பாசலில் உள்ள மேனர் பல்பொருள் அங்காடியின் தலைமையகத்தின் கூரையில் இருந்த ஆவியாக்கிக் குளிர்விக்கும் கோபுரமே இந்த நோய்த்தொற்றின் சாத்தியமான மூலமாக இருக்கலாம் என அதிகாரிகள் அடையாளம் கண்டு, வெள்ளிக்கிழமை அதை மூடினர்.
மூலம்- swissinfo


