22.8 C
New York
Saturday, August 8, 2026

பண்ணையிலிருந்து தப்பி ஓடிய வாலபி பிடிக்கப்பட்டு ஒப்படைப்பு.

மத்திய சுவிட்சர்லாந்தில் ஒரு பண்ணையிலிருந்து தப்பி ஓடிய வாலபி ஒன்று பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மற்றும் ஸூக் ஏரிக்கு இடையில் அமைந்துள்ள டயட்வில் என்ற கிராமத்தில், ஒரு இளைஞர் முகாமுக்கு அருகிலுள்ள வனப்பகுதியின் ஓரத்தில் இருந்த அந்த மார்சுபியல் விலங்கின் (முதலில் கங்காரு என்று கருதப்பட்டது) ஒரு சிறிய காணொளியை ‘ப்ளிக்’ செய்தித்தாள் வெளியிட்டது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மார்சுபியல் விலங்கின் உரிமையாளர் அருகிலுள்ள லூசெர்ன் மாகாணத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த உரிமையாளர் உரிமம் பெற்ற ஒரு வாலபி பண்ணையைச் சேர்ந்தவர்.

அண்டை மாகாணமான ஆர்காவின் பெரிய விலங்குகள் மீட்பு சேவை அந்த வாலபியைப் பிடித்தது.

கங்காருவும் வாலபியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், கங்காரு உருவத்தில் பெரியது எனவும், வாலபி சிறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles