ராவ் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று மாலை சுமார் 6:20 மணியளவில், ஆராவ் ரயில் நிலையத்தில் சண்டை நடந்ததாக ஆர்காவ் மாகாண காவல்துறை அவசர அழைப்பு மையத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது. மைக்ரோலினோ மளிகைக் கடைக்கு அருகிலுள்ள படிக்கட்டுகளில் பல இளைஞர்களை அதிகாரிகள் கண்டனர்.
அவர்களில் ஒருவரான 19 வயது ஆப்கானிய இளைஞர், பலமுறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இருந்தது தெரியவந்தது.
காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த அந்த நபருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளித்தனர். அம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காவல்துறை வருவதற்கு முன்பே, சந்தேகப்படும் குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். ஆர்காவ் மாகாண காவல்துறை ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் மற்றும் சந்தேகப்படும் குற்றவாளி குறித்து தகவல் அளிக்கக்கூடிய நேரில் கண்ட சாட்சிகளையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மூலம்- bluewin


