சுவிட்சர்லாந்தின் தாழ்நிலப் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக, பல வீடுகளுக்குள் வெப்பநிலை 30°C-ஐத் தாண்டியுள்ளது. இதனால், வீட்டில் இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க முடியாத சிலர், குளிரூட்டப்பட்ட ஹோட்டல்களில் தங்குவதற்காக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் தாழ்நிலப் பகுதிகளில் பல நாட்களாக 30°C-க்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது.
இந்த வெப்பம் வெளிப்புறங்களில் மட்டுமல்லாமல், பல வீடுகளுக்குள்ளும் தேங்குவதால் மக்களின் தூக்கம், கவனம் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
இதனால், சிலர் உறங்குவதற்காகவே குளிரூட்டப்பட்ட ஹோட்டல்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை விட ஜெர்மனியில் ஹோட்டல் கட்டணம் குறைவாக இருப்பதால், தங்களது குடும்பம் ஜெர்மனியைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்


