பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் மத ரீதியான தலைக்கவசங்கள் அணிவதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக சூரிச் மாகாண நாடாளுமன்றம், வாக்களித்துள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சியின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது, ஆறு பேர் வாக்களிக்காமல் இருந்த நிலையில், 87 வாக்குகள் ஆதரவுடனும் 82 வாக்குகள் எதிர்ப்புடனும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிறைவேற்றினர்.

இதையடுத்து, அரசுப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் மத ரீதியான தலைக்கவசங்கள் அணிவதைத் தடைசெய்யும் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்தத் தடைக்கு எதிரானவர்கள் இஸ்லாமியத் தலைக்கவசம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்று வாதிட்டனர்.
இத்தகைய தலைக்கவசங்கள் பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், பெண் மாணவியருக்கான சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் தடுப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மூலம்- swissinfo


