சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஜென்ரீனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அறிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இனி ஆஜென்ரீனா அணிக்காக விளையாடமாட்டேன்.

உலக கோப்பை கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த 2 நாட்கள் கழித்து இந்த முடிவை எடுத்தேன்.
ஆனால் எனது தந்தையின் மரணமே என்னை இந்த முடிவு எடுக்க தூண்டியது.
இறுதி போட்டி முடிந்து இவ்வளவு காலம் கழித்து, நிறையவே யோசித்து, ஆஜென்ரீனா அணியில் இருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். இதுதான் சரியான நேரம்.
அனைத்தையும் வென்ற போதும், அதற்கான முழு உழைப்பையும் கொடுத்தேன்.
காலப்போக்கில் சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரும். அதுபோலவே இப்போது எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.
20 ஆண்டுகள் எனக்கு அளித்த ஆதரவுக்கும், காட்டிய அன்புக்கும் நன்றி என மெஸ்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2005 ஓகஸ்ட் 17 அன்று ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மெஸ்ஸி 205 சர்வதேசப் போட்டிகளில் 125 கோல்களை அடித்துள்ளார்.


