தென்கிழக்கு சுவிட்சர்லாந்தின் தொலைதூரப் பகுதியில், டச்சு சுற்றுலாக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் சிலர் படுகாயமடைந்தனர் என்று கிராபுண்டன் மாகாண காவல்துறை இன்று தெரிவித்தது.

கிராபுண்டன் மாகாண காவல்துறையின் தகவல்படி, இது ஒரு ஒற்றை வாகன விபத்து ஆகும். கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள ஜெர்னெஸிலிருந்து சுஷ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, லெஸ் கிராமத்திற்கு அருகில், சாலைப் பணிகள் நடைபெறும் பகுதியில் சாலையிலிருந்து விலகி கவிழ்ந்தது.
அந்தப் பேருந்தில் 45 வயது வந்த பயணிகள் இருந்ததாக காவல்துறை மேலும் தெரிவித்தது. அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் படுகாயமடைந்தனர், ஏழு பேர் மிதமான காயங்களுடனும் மற்றும் முப்பது பேர் சிறு காயங்களுடன் தப்பினர்.
சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த ஏழு மீட்பு ஹெலிகொப்டர்களும், பதின்மூன்று அம்புலன்ஸ் குழுக்களும், காயமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன.
ஜெர்னெஸ் நகராட்சி, விபத்தில் சிக்கியவர்களுக்காக ஒரு வரவேற்பு மையத்தை அமைத்து, சிற்றுண்டிகளையும் வழங்கியது. விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது.
மூலம்- swissinfo


