16.4 C
New York
Tuesday, March 31, 2026

நாளையுடன் நிறைவுக்கு வரும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வர்த்தக வாகனங்களின் சாதாரண இறக்குமதியைத் தொடங்கவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவும்  இலங்கை  திட்டமிட்டுள்ளது

 இலங்கையில்  போதிய முன்னேற்றம்  

இதன் காரணமாக அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் 2025 இல் முடிவடையும் .

அதேசமயம்  இலங்கையில்  கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை தொடர்வதற்கு போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரம் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் தேர்தலை நடத்துவதில் நிதி நிதிக்கு பிரச்சினை இல்லையென்றாலும் அது தேர்தல் நிதி நிதி திட்டத்தின் நேரத்தை பாதிக்கிறது எனவும் தேர்தல் நடத்தினால் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நேரத்தை தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

Related Articles

Latest Articles