0.8 C
New York
Monday, December 29, 2025

உக்ரேன் போர்க்கைதிகளை விடுவிக்க கோரி லூசெர்னில் பேரணி.

பேர்கன்ஸ்ரொக்கில் உக்ரைன் அமைதி மாநாடு நேற்று ஆரம்பமாகிய நிலையில், உக்ரேனிய போர்க் கைதிகளை விடுவிக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளக் கோரி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

லூசெர்ன் ரயில் நிலையத்தின் முன்பாக, நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், 200 பேர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பலர் உக்ரேனிய கொடிகளுடன் காணப்பட்ட அதேவேளை,  “உக்ரேனிய போர்க் கைதிகளைக் காப்பாற்றுங்கள்” என்று எழுதப்பட்ட டி-சேர்ட்களை அணிந்திருந்தனர்.

போர்க் கைதிகளுக்காக ஒரு நிமிட அமைதியும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles