சூரிச் நகரில் பொலிஸ் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
நேற்றுமாலை சூரிச் நகரில் பொலிஸ் காரின் இயந்திரப் பகுதி தீப்பிடித்து எரிவதை காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன. அம்புலன்ஸ் ஒன்றும் அங்கு காணப்பட்டது.
ட்ரைம்லி நகர மருத்துவமனைக்கு அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஒரு காணொளியில் டயர் வெடிக்கும் சத்தத்தையும் கேட்க முடிகிறது.
சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பொலிசார், அதற்கான காரணத் தெளிவாக தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆங்கிலம் மூலம் – 20min.