சூரிச் மற்றும் லௌசானில் உள்ள பெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் டெக்னோலஜி (ETH சூரிச் மற்றும் EPFL) பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை முன்று மடங்கு உயர்த்தவுள்ளன.
ETH சபையின் கடைசி கூட்டத்தில் இதற்கு ஆதரவாக வாக்குகள் அளிக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என, ETH சபையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவின்படி, 2025 ஆம் ஆண்டின் இலையுதிர் கால அரையாண்டில் மூன்று மடங்கு கல்விக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும்.
ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கட்டண உயர்வு இல்லாமல் தங்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடிக்க முடியும்.
தற்போது, ETH சூரிச் மற்றும் EPFL பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான சுவிஸ் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு அரையாண்டுக்கு 730 சுவிஸ் பிராங் கட்டணம் அறவிடப்படுகிறது.
சில சுவிஸ் பல்கலைக்கழகங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணங்களில் வேறுபாடு உள்ளது.
உதாரணமாக, சென். கல்லன் பல்கலைக்கழகத்தில், உள்நாட்டு மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்புக்கு ஆயிரத்து 229 பிராங்குகளைச் செலுத்தும் அதே நேரத்தில் வெளிநாட்டு மாணவர்கள் 3 ஆயிரத்து129 பிராங்குகளைச் செலுத்துகின்றனர்.
மூலம் – Swissinfo