Gotthard இற்கு முன்பாக நேற்று தெற்கு நோக்கிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Erstfeld மற்றும் Göschenen இடையில் வாகனங்கள் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
வடக்கு நோக்கிய பாதையில் செல்வோரும், பொறுமையாகவே நகர வேண்டியிருந்தது.
Quinto மற்றும் Airolo இடையில், நேற்று மதியம் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதனால், வாகனங்கள் 50 நிமிடங்கள் வரை தாமதமாகவே பயணங்களை மேற்கொண்டன.
மூலம் –The swiss times

