6.8 C
New York
Monday, December 29, 2025

ஒன்றரை மாத சிசு கொலை- தாய் கைது.

யாழ்ப்பாணத்தில், ஒன்றரை மாத சிசு கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு,  தலையில் பலமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளது. 

அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத சிசுவே  உயிரிழந்துள்ளது. 

சிசுவுக்கு  தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் சிசுவை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்று கொண்டு சென்றுள்ளார். 

குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது உயிரிழந்துள்ளது. 

சிசுவின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்ட வேளை, சிசுவின் கைகள் மற்றும் கால்கள் முறிந்திருந்தமை , தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை , காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்களும் , உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. 

சிசுவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிசுவின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே சிசு இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை பொலிஸார் சிசுவின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்த நிலையில, குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். 

” குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது 

Related Articles

Latest Articles