Wilchingen இல் உள்ள பண்ணையில் உள்ள கொட்டகையில் நேற்றிரவு 8 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்ததாகவும், சைரன் ஒலி எங்கும் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பண்ணைக்குப் பக்கத்து வீட்டைக் காப்பாற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பண்ணையில் இருந்த 2 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன என்றும் 121 பசுக்கள் மற்றும் கன்றுகள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் எதையும் பொலிஸார் வழங்கவில்லை.
மூலம்- zueritoday