26.3 C
New York
Monday, June 23, 2025

ஏடிஎம் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகள் 14 பேர் கைது.

சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் மையங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில், Rhineland-Palatinate (D) இல் ஏடிஎம் குண்டுவெடிப்பு நடந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு பொலிசார் 13 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

Alsace இல் உள்ள Strasbourg இல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கும்பல் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளை நடத்திய பல இலட்சம் யூரோக்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

நேற்று அதிகாலையில் தெற்கு Palatinate இல் உள்ள Hagenbach இல் Volksbank கிளையின் ஏடிஎம் இயந்திரத்தை குற்றவாளிகள் வெடிக்கச் செய்தனர் என்று Rheinpfalz இல் உள்ள பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பில் பங்கேற்ற ஐந்து சந்தேக நபர்கள் காலையில் Strasbourg வந்தபோது, ​​​​ஏனைய சந்தேக நபர்களுடன் வாகன திருத்துமிடம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.

பல வாகனங்கள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் நெதர்லாந்து, பிரெஞ்சு மற்றும் ரஷ்யர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ஜேர்மனியில் சுமார் ஒரு 12 இடங்களிலும்,  , சுவிட்சர்லாந்தில் குறைந்தது ஐந்து இடங்களிலும், ற்றும் ஸ்ட்ராஸ்பேர்கில் ஒருமுறையும் ஏடிஎம் மையங்களைத் தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles