-0.2 C
New York
Tuesday, December 30, 2025

கண்காட்சிக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.

குண்டு மிரட்டல் விடுத்த ஒருவரை  Solothurn கன்டோனல் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஹெசோ இலையுதிர்கால கண்காட்சியை  (Heso autumn fair) இலக்காகக் கொண்டு, இந்த குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பகுதியை சுற்றிவளைத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிசார் சோதனையிட்டனர்,

ஆனால் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை.

பொலிசாரின்  விசாரணையின் போது, ​​​​ அச்சுறுத்தல் விடுத்ததாக கண்டறியப்பட்ட  72 வயதான சுவிஸ் பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலம் -Bluewin

Related Articles

Latest Articles