Gachnang இல், ஞாயிற்றுக்கிழமை மாலை கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால் வாகனம் முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளது.
ஞாயிறு இரவு 8:45 மணியளவில், ஒரு வீட்டின் முன்பாக எரிந்து கொண்டிருக்கும் கார் தொடர்பாக கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
Gachnang தீயணைப்புத் துறையினர் விரைவாக தீயை அணைத்த போதும் கார் கார் முழுவதுமாக தீக்கிரையாகி விட்டது.
தொழில்நுட்பக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என Thurgau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் -zueritoday.