24.8 C
New York
Thursday, June 26, 2025

சைக்கிள் ஓட்ட வீராங்கனைக்கு நடந்தது என்ன? – தீவிர விசாரணை.

சைக்கிள் ஓட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில்  உயிரிழந்த சுவிஸ் வீராங்கனை Muriel Furrer இன் மரணம் தொடர்பாக சூரிச் கன்டோனல் பொலிசார், தற்போது முழு வேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 வயது வீராங்கனை எப்படி  விழுந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Muriel Furrer கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் , மூளையில் காயம் அடைந்து மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மரணமானார்.

சட்டமா அதிபர் அலுவலகமும் சூரிச் கன்டோனல் பொலிசும், விபத்து குறித்து ஒரு ஆரம்ப கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

விபத்துக்கான சூழ்நிலைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அது இன்னும் நிறைவடையவில்லை எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப கண்டறிவுகளின்படி,  Schmalzgrueb  என்ற குக்கிராமத்திலிருந்து சிறிது இடது பக்கம் வளைவில் இறங்கும் போது, ​​அவர் Küsnacht அருகே விழுந்தார்.

இதில் மூன்றாம் தரப்பின் தொடர்புக்கான அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லை.

விசாரணையின் தற்போதைய நிலவரப்படி, அவர் விழுந்தது யாராலும் கவனிக்கப்படவில்லை.

சம்பவத்தின் தொலைக்காட்சி படங்கள் அல்லது மற்ற பதிவுகள் எதுவும் தற்போது இல்லை. சாட்சிகளும் தெரியவில்லை.

வீதி பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த ஒருவரால் அப்பால் காட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த வீராங்கனை கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறிது நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்து நடந்த சரியான நேரம் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.

மூலம் – 20min

Related Articles

Latest Articles