26.7 C
New York
Thursday, September 11, 2025

பாசெல் நகரில் பலஸ்தீன ஆதரவுப் பேரணி.

பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து, சுமார் 3,000 பேர் நேற்று பாசெல் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதி பெறப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவுமின்றி நடைபெற்றது.

காசா மற்றும் லெபனானில் இடம்பெறும் மோசமான நடவடிக்கைகள் குறித்து இந்தப் பேரணியில் பங்கேற்ற செயல்பாட்டாளர்கள்  இஸ்ரேலைக் குற்றம்சாட்டினர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், SBB  ரயில் நிலையம் அருகே உள்ள De-Wette பூங்காவில்  திரண்ட இவர்கள் இந்தப் பேரணியை நடத்தினர்.

அங்கிருந்து ஆர்ப்பாட்ட பேரணி அங்கீகரிக்கப்பட்ட பாதையில் நகர மையம் வழியாக பாராக்ஸ் பகுதியை நோக்கி சென்றது.

பலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும் காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சை நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles