16.6 C
New York
Wednesday, September 10, 2025

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கொலை- மகன் கைது!

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 11 மணியளவில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அரியாலையை சேர்ந்த குலோதுங்கம் மதிசூடி என்ற 66 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரை 32 வயதுடைய இவரது மகனே கொலை செய்துள்ளார்.

கொலையாளியான மகன், காதல் முறிவினால்  மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார் என, கொலை செய்யப்பட்டவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  பொலிசாரால் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles