Ostermundigen இல் கடந்த மாதம் தொழில்துறை விபத்தில் காயம் அடைந்தவர் மரணமாகியுள்ளார்.
அவர் கீழே விழுந்ததில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை இறந்தார் என பெர்ன் கன்டோனல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மார்ச் 26, 2025 புதன்கிழமை காலை 8:15 மணியளவில் இந்த விபத்து குறித்து பெர்ன் கன்டோனல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளியான குறித்த நபர், பல மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
இறந்தவர் பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான இத்தாலியர் ஆவார்.
மூலம்- 20min.

