15.5 C
New York
Sunday, May 3, 2026

ரோன் நதியில் வெள்ளப்பெருக்கு ஆபத்து.

சுவிட்சர்லாந்தின் ரோன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்ளெட்ச் முதல் மார்டிக்னி வரையிலான ரோன் ஆற்றின் ஒரு பகுதிக்கு நிலை 2 (வரையறுக்கப்பட்ட ஆபத்து) எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வறண்ட நீரோடை படுகைகள், ஏரிகள் அல்லது ஆறுகளின் கரைகள் மற்றும் செங்குத்தான சரிவுகள் உள்ளிட்ட நீர்வழிகளிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு MeteoSwiss அறிவுறுத்தியுள்ளது.

புதன்கிழமை இரவு முதல் ஆற்றின் ஓட்டத்தில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், Organe cantonal de conduite (OCC) நதிக்கு முன் எச்சரிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய கட்டுப்பாட்டு ஊழியர்கள் அணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், நீர்வழிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம், பாலங்களில் நிறுத்த வேண்டாம், நீரோட்டத்தை கட்டுப்படுத்த வேண்டாம், நிகழ்வுகளை படம்பிடிக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ கூடாது, வெள்ளம் ஏற்பட்டால் பாதாள அறைகள் மற்றும் நிலத்தடி தரிப்பிடங்களை தவிர்க்கவும், அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கண்டிப்பாக இணங்கவும் என கூறப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் இன்று மாலை 6 மணிவரை கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles