பெர்னில் நேற்றுப் பிற்பகல் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
பிற்பகல் 3 மணியளவில் நடந்த அனுமதி பெறப்படாத இந்த ஆர்ப்பாட்டத்தில், பெர்ன் ரயில் நிலைய சதுக்கத்தில் பலஸ்தீன கொடிகளுடன் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.
பேரணி அங்கிருந்து, நகரம் முழுவதும் சென்ற போது, கசினோ சதுக்கத்தில், பொலிசாருடன் மோதல் ஏற்பட்டது.
பொலிசார், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலத்தைக் கடப்பதைத் தடுக்க முயன்றனர்.
10 முதல் 15 பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தபோது ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை உடைத்தனர்.
பேரணி பின்னர் சவாரி அரங்கை அடைந்தது. போது, பொலிசார் வீதிகளில் தடைகளை அமைத்திருந்தனர். இருப்பினும், இந்த தடைகள் பின்னர் அகற்றப்பட்டன.
பின்னர் ஆர்ப்பாட்டக்கார ர்கள் கலைந்து சென்றனர் என்றும், நடவடிக்கையின் போது ஐந்து காவல்துறை அதிகாரிகளும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என ஏழு பேர் காயமடைந்தனர், என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பேரணியின் போது, சொத்து சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கட்டடங்களின் ஜன்னல்கள் மற்றும் ஒரு பொலிஸ் வாகனம் என்பன உடைக்கப்பட்டன.
மூலம்- 20min.