சூரிச்சின் மாவட்டம் 2 இல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை 1:45 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து பெரிய தீப்பிழம்புகள் எரிந்து கொண்டிருந்தன என்று சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தாங்களாகவே பாதுகாப்புக் கருதி வெளியேறியதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம்- 20min