35.6 C
New York
Monday, June 23, 2025

3 கார்கள் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் படுகாயம்.

கிராபுண்டன், ரோங்கெல்லன் அருகே A13 இல் நேற்று இடம்பெற்ற விபத்தில், 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

78 வயது பெண் ஒருவர் சுரிலிருந்து A13 மோட்டார் பாதையில் பிற்பகல் 3 மணியளவில் தெற்கு நோக்கி காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

கிராப்டீக் சுரங்கப்பாதைக்குப் பின்னர் அவர் இடதுபுறம் திரும்பி 36 வயதுடைய நபர் ஓட்டி வந்த  காரில் நேருக்கு நேர் மோதினார்.

பின்னர் அந்தப் பெண்ணின் கார் திரும்பி, 23 வயது நபர் ஓட்டி வந்த வடக்கு நோக்கிச் சென்ற மற்றொரு வாகனத்தில் மோதியது.

தீயணைப்பு வீரர்கள் வந்தே கார்களில் இருந்தவர்களை மீட்க வேண்டியிருந்தது.

நேருக்கு நேர் மோதிய விபத்தில் 78 வயது மற்றும் 36 வயதுடைய இருவரும் அவர்களது கார்களில் சிக்கிக் கொண்டனர்.

துசிஸ் தீயணைப்புத் துறையின் வீதி மீட்புக் குழுவால் அவர்களை மீட்க வேண்டியிருந்தது.

ஒரு காரில் இருந்த பெண் மற்றும் மற்றைய காரில் இருந்த நபர், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காயம் அடைந்த நிலையில் சுரில் உள்ள கிராபுண்டன் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles